மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் ஏழு பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு!

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரான்குளம் பகுதியில் நேற்று சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. கிரான்குளம் பகுதியிலுள்ள தனியார் காணியொன்றிலிருந்து உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கிரான்குளம் பகுதியை சேர்ந்த 7 பிள்ளைகளின் தந்தையான 55 வயதுடைய ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது கடந்த திங்கட்கிழமை வேலைக்கு சென்ற நபர் வீட்டிற்கு திரும்பாத நிலையில், நேற்று காட்டுப் பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.